பிரதிலிபியில் படியுங்கள் – “தெளிவான போதை”

“தெளிவான போதை”, – பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/story/gQCMSTPDZCR3?utm_source=android&utm_campaign=content_share
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

பிரதிலிபியில் படியுங்கள் – “கோயம்பேடு பஸ்டாண்ட்”

“கோயம்பேடு பஸ்டாண்ட்”, – பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/story/Z00zOuUf2Gtm?utm_source=android&utm_campaign=content_share
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

மழலையில் பிச்சை பெருங்கொடுமை

இந்த பூலோகம் எத்தனை எத்தனையோ கண்டுபிடிப்பையும், விண்வெளி ஆராய்ச்சியிலும்
பரபரப்பாக இருக்கிறது. ஆனால் ஒரு பக்கம் ஏழ்மை தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.
நேற்று சென்னை லூகாஸ் டீவிஎஸ் சந்திப்பில் பேருந்துக்காக காத்திருந்தேன்.அப்போது மூன்று குழந்தைகள் மிக பரபரப்பாக பிச்சைஎடுத்து கொண்டிருந்தன. அவர்கள் பிச்சை கேட்க்கும் விதமே கொஞ்சம் கசப்பாகதான் இருக்கிறது.
“அண்ணா பசிக்கிதுணா..காசு தாங்கனா”என பாவமாக முகத்தை வைத்துகொண்டே கேட்கிறது.
கால் சந்துக்குள்ளும் புகுந்த, புகுந்து மிகவும் பரபரப்பாக பிச்சை கேட்கிறார்கள். குளிக்காத பரட்டை தலை,துவைக்காத உடை அழுவதாய் நடிக்கும் முக பாவனை இதுதான் அவர்களுக்கு அடையாளம்.திடிரென நின்றிருப்பவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சும்.அவர்களும் கூச்சபட்டு ஒதிங்கி நின்று விடுவார்கள் ஆனால் பிஞ்சு கைகள் அவர்களின் ஆடையை தொங்கி பிச்சை கேட்பதை நிறுத்தாது.யார் இப்படி எல்லாம் நடிக்க கற்று தருகிறார்கள்.இவ்வளவு நேர்த்தியாக அந்த குழந்தைகளின் வாழ்க்கையை சீரழிப்பது யார் என தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க துடிக்கும் நாம் ஏன் குழந்தை பருவத்தில் பிச்சை எடுப்பவர்களைகண்டுகொள்வதில்லை.அந்த நிமிடத்தில் அங்கிருந்து போனால்போதுமெனகடந்துவிடுகிறோம்.மழலையில் அவர்கள் வயதில் எதை ஆழமாக கற்கிறார்களோ அது தானே அவர்கள் முதுமை வரை தொடரும்.என்னை நோக்கி வந்த குழந்தையை பிடித்து உனக்கு காசு தருகிறேன்.உன் அப்பா அம்மா எங்கே இருக்கிறார்கள் அங்கே கூட்டி போ என கேட்டேன்
அதற்கு அந்த குழந்தை மறுத்துவிட்டது.என் கையை உதறிவிட்டு கடந்துவிட்டது.இதுவும் அவர்களின் பெற்றோர்களால் கற்பிக்கபட்டது தான். மனிதம் சில தவறுகளுக்காக போராடுகிறது.சிலதவறுகளை கண்டும் காணாமல் லேசாக இரங்ககுணம் தந்து கடந்துவிடுகிறது.பூமியில் கல்வி கற்று சாதிக்க துடிக்கும் அன்பு மழலைகளுக்கு மத்தியில் இப்படியும் மோசமான சில ஜீவராசிகள் இருக்க தான் செய்கின்றன. இவர்களை மீட்டெடுக்க அரசாங்கம் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே வருத்தமளிக்கிறது. இதற்கு தகுந்த சட்டமும் காவல்துறையின் கண்காணிப்போடும் இவர்கள் ஒழிக்கபடவேண்டும்.யார் குழந்தைகளை இப்படி செய்கிறார்கள் என கண்டறிந்து தக்க தண்டனை தர வேண்டும்.பாதிக்க பட்ட குழந்தைகளை அரசு குழந்தை காப்பகத்தில் வைத்து கல்வி கொடுக்க படவேண்டும்.என்பதே என்னை போல பலறின் ஆசையாக இருக்கிறது.

“சுருட்டுகளின் ராஜா”கம்யூனிச கியூபா

கியூபா இன்று ஒவ்வோரு நாடும் பார்த்து பின்பற்றவேண்டிய பல நல்ல முன்னேற்றகளை கொண்ட நாடு.உலகத்தின் தேன்கிண்ணம்
என செல்லமாக அழைக்கபடும் இந்த நாடு ஒருகாலத்தில் பல நாட்டவர்களிடம் அடிமையாகதான் வாழ்ந்தது.முதலில் ஸ்பெயின்
பிறகு அமெரிக்கா எப்பொதும் தன்னை சுற்றி உள்ள தீவு நாடுகளை அடிமையாக வைத்திருப்பதே இவர்களுக்கு பொழுதுபோக்கு.
அமெரிக்கவின் கொடுங்கோல் ஆட்சியிடம் மீண்டு
இப்போது இது ஒரு கம்யூனிச நாடாக மாறிஇருக்கிறது.பிடல்காஸ்ட்ரோ,சேகுவேரா
அவர்களின் ஆலோசனையும்,ஆட்சியும் பெரியமுன்னேற்றத்தை கொண்டுவந்துள்ளது.
பொதுவாக விவசாயத்தை மட்டுமே ஆதாரமாய் இருக்கும் நாடு. கரும்பு தான் அதிகபயிரிடபடுவது.
ஒரு காலத்தில் கரும்பு சாறு குடித்தே போரிட்டனர்கள் இந்த மக்கள்.நெல்,மற்றும் காய்கறியும் இங்கு பிரதானமாய் விளையும்.
பிடலின் முயற்சியில் இங்கு மருத்துவம், தலை சிறந்தமருந்துகளும்கண்டுபிடிக்கபட்டுள்ளது.கியூபாவில் இன்னோரு பொக்கிஷம் கிடைக்கிறது.
சுருட்டு இலைகள் இதை கொண்டு இங்கு அதிகபடியான சுருட்டு உற்பத்தி இன்றளவும் நடக்கிறது. உலகின் அதிக சுருட்டு ஏற்றுமதி கியூபாவிலிருந்தே நடக்கிறது.இங்கே டிராக்டர் போன்ற சாதனங்களை பயன்படுத்தகூடாது.
விவசாயம் முழுக்க முழுக்க இயற்கை வழியிலே செய்யபடுகிறது. மாடுகளை வைத்து தான்
இன்னும் அங்கே உழுகிறார்கள். விவசாயிகள் கூட நல்ல உடைஅணிந்து தலையில் கௌபாய் தொப்பி எல்லாம் போட்டு வேலை செய்கிறார்கள்.
இங்கே கல்விக்கு காசு கிடையாது. நம்ம ஊரை போல இங்கே கல்வியை
விற்பதில்லை.இலவசமாக கல்வி,உலகத்தில் அதிகபடித்த மக்கள் வாழும் நாடு.மொத்தம் 99.8 சதவிகிதம் படிப்பறிவை
கொண்டுள்ளது.பொதுவாக கடந்த 2009 வரை
யாரும் கணினியோ,செல்போனோ இணையத்தை பயன்படுத்த கூடாது. அதற்கு பிடல் சொல்லும் காரணம் இங்கே மக்கள்தேவையில்லாம் பொழுது போக்குக்கு அடிமையாகி விடகூடாது. இப்போதுசில வருடங்களாக தான் இணையதள வசதி உள்ளது.
அதுவும் மிககட்டுபாடோடு கையாளப்படுகிறது.
இந்தநாட்டில் மருத்துவம் என்பது எல்லாமே அரசாங்கம் சம்மந்தபட்டது. இதற்கும் தனியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கியூபா இந்தியாவுக்கு பிறகு சுதந்திரம் பெற்ற நாடு தான். ஆனால் இவர்களின் முன்னேற்றம் நம்மிடமில்லை.

இந்தி எதிர்ப்பு தேவையா?? இல்லையா???

இந்தி எதிர்ப்பு தமிழர்கள் என்ன முட்டாள்களா??
தமிழை கற்றுகொண்டால் என்ன ஆகி விட போகிறது??அறிவு விரிவடையுமல்லவா??
வேலை கிடைக்குமல்லவா?? என்றெல்லாம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நிறைய தமிழர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனை இப்போது நேற்று வந்ததல்ல. ஆதி காலத்திலே தொடங்கிற்று.சமஸ்கிருதம் புகுத்தி
தமிழை மறக்க நிறைய வேலைகள் நடந்துள்ளது.
அதன் விளைவு இன்றும் நம்மில் சுத்தமான தமிழ்பெயர்கள் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது.எல்லா பெயருக்கு பின்னாலும் “ஷ்”
மோகபேய் பிடித்துள்ளது.அதற்கு பின் எந்த தொல்லையும் இல்லாமல் போய்கொண்டிருந்த
காலத்தில் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியில் 1965 ஆண்டில் இது மீண்டும் வெடித்தது.இந்தி மொழி காட்டாய பாடாமாக தமிழகத்தில் மாற்ற ராஜாஜி தலைமையிலான ஆட்சி வித்திட்டது.ராஜாஜி அவ்வளவு எளிதாக இதை கைவிடவில்லை.
அவருக்கு எதிராக ஏகப்பட்ட புரட்சியே மூண்டது. தமிழகத்தில் பல்லாயிர கணக்கான மக்களை திராவிட இயக்கம் ஒன்று திரட்டி பெரிய போராட்டமாய் நடத்தபட்டது.இதில் நிறைய பேர் படுகாயபட்டார்கள்.சிலர் தீ குளித்து உயிரை மாய்த்து கொண்டதுமுண்டு.ராணுவ படையே தமிழகத்திற்கு அனுப்ப பட்டு போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை.இதில் திராவிட இயக்கத்தை சேர்ந்த
பெரியார்,அண்ணாதுரை,கலைஞர் மற்றும்
பாவேந்தர் பாரதிதாசன் என பலரும் போராடி வெற்றிகண்டார்கள்.இதற்கு பிறகு நேரு கொடுத்த உறுதிமொழி இனி உங்கள் விருப்பத்திற்குஹிந்தியைபடிக்கலாம்.கட்டாயமாக்கபடாது என்பது தான் அது.அதற்கு பிறகு மோடியின் இரண்டாவது ஆட்சி அரியணைக்கு பிறகு இந்த மும்மொழி கொள்கை ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் பலரிடம் எதிர்ப்பும்,சிலரிடம் ஆதரவும் உண்டு. இது கலாச்சார சமந்தபட்ட பிரச்சனையாகவும் பார்க்கிறார்கள்.ஏனென்றால் மொழி கற்பித்தல் என்பது கலாச்சாரதோடு சம்மந்தபட்டுள்ளது.ஏற்கனவே ஆங்கிலம் பாதி தமிழ் படிக்கும் மாணவர்களை விழுங்கி கொண்டது.இதில் ஹிந்தியும் வந்தால் அவ்வளவு தான் என்பதே அது. பல வட மாநிலத்தில் இந்த ஹிந்தி தான் சின்ன சின்ன மொழிகளை அழித்துள்ளது.எடுத்துக்காட்டாக வங்காளத்தை கூட சொல்லலாம்.மோடி ஹிந்தியை இந்தியா முழுதும் பரப்பவும், ஒருமொழி கொள்கையை உருவாக்க உண்டாக்கபட்ட சதி எனவும் பேசப்படுகிறது.நான் கேட்பது ஒன்று தான் அப்தூல் கலாம்,காமராஜர்,சுந்தர் பிச்சை இவர்கள் எல்லாம் இந்தி படித்தா முன்னேறி இருக்கிறார்கள்.இந்தி படிக்க வேண்டாம் என யாரும் இங்கே சொல்லவில்லை.
உனக்கு தேவையென்றால் படியென தான்
சொல்கிறோம்.தேவையில்லாமல் இந்தியை படித்தே ஆகவேண்டும் என்று சொல்கிறீர்களே
அதை தான் வேண்டாம் என்கிறார்கள்.மொழியை எப்படி வேணுமானால் கற்கலாம்.ஆனால் கலாச்சாரத்தை கற்பத்திலே புகுத்தி எம் பிள்ளைகளின் மூளையை சலவை செய்யாதே
என்பதே இங்கே பலரின் கருத்தாக இருக்கிறது.

பணக்கார தந்தை ஏழைதந்தை “கொஞ்சம் வித்தியாசமான புத்தகம்”

credit: third party image reference

“பணக்கார தந்தை ஏழைதந்தை”என்ற புத்தகம் உலகின் மிக பிரபலமான ஒரு புத்தகம்.இது அதி விற்பனையான புத்தகம் என கூட சொல்லலாம்.

இதை என் நண்பர் எனக்கு படிக்க பரிந்துரைத்தார்.நான் பொதுவாக கம்யூனிஸ்ட் கோட்பாட்டாளன் என்பதால் இந்த புத்தகத்தை படிக்க தயங்கினேன்.அவர் வற்புறுத்தி படிக்க சொன்னதால் படித்தேன். இதில் பணத்தை எப்படி சம்பாதிக்க முடியும் என்பதை கதாநாயகனுடைய

தந்தை(பணக்கார தந்தை) அவருக்கு கற்றுக்கொடுக்கிறார்.பணம் என்பது “பயம்”என்ற சொல்லிருந்து ஏழையிடமும் பணக்காரனிடம் அது வித்தியாசமாய் விளையாடுகிறது என்பதே இந்த புத்தகத்தில்

நான் கற்றுகொண்ட கூற்றென சொல்லலாம்.

credit: third party image reference

“ஊழியன் பணத்திற்காக உழைக்கிறான். பணக்காரன் பணத்தை

அவனுக்காக உழைக்க

வைக்கிறான்”என்று அவர் பணக்காரதந்தை சொல்லும் போது நம்மையே யோசிக்க வைக்கும்

ஒரு மையகருத்தாகிறது.தனது நிஜ ஏழைதந்தை எப்போதும் அவரிடம் பணத்தை பற்றி தேவையும்

அதை எப்படி சேமித்தல் என்பதையும் கேட்ட அவருக்கு வெறுப்பெழுகிறது. நம்மிடம் இருக்கும் பணத்தை சேமிக்க துணியும் பணத்தை ஒரு முதலீட்டில் செலுத்தி பணம் பார்க்க வித்தைகளை வித்தியாசமான வழிமுறையில் கற்று தருகிறாய். பணக்காரர்கள் மீதான இருந்த வெறுப்பை இந்த புத்தகம் மாற்றிஉள்ளது.ஏன் உன்னாலும் பணம் சாம்பாதிக்க முடியும் என்ற யுத்தியையும் அவர் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து அவர் வித்தியாச படுத்தி காட்டியுள்ளது கொஞ்சம் எனக்கும் ஒரு ஊக்கத்தை தந்துள்ளது.இந்த புத்தகம் பங்கு சந்தை பற்றிய அறிவையும்

எனக்கு திறந்த கண்ணோட்டத்தை தந்துள்ளது.இது வெறும் பணம் சாம்பாதிப்பது சம்மந்தமான புத்தகம் மட்டுமல்ல தோல்விக்கு பயந்து பதுங்கும் இளைஞனை ஊக்கபடுத்தவும்,உன் காதுகளை உன்னை முன்னேற்றநினைப்பவனுக்கு மட்டுமே கேட்க திறந்து விடு என்ற அருமையான கோட்பாடையும் சொல்லி தந்துள்ளது.இந்த புத்தகத்தின் பக்கத்தை விழுங்கி கற்றப்பின் எழுத்தாளானாக துணியும் எனக்கு என் எழுத்தைஎப்படிவிளம்பரம் செய்யவேண்டுமெனவும் தெரியவேண்டுமெனவும் கற்றுதந்துள்ளது. இதை முடிந்த வரை என் அன்பு நண்பர்களுக்கு

பரிந்துரை செய்து படிக்க செய்வேன்.

சேகுவேரா எனும் மனித நேயன்

எல்லோரும் இந்த சேகுவாராவை புரட்சி பற்றி பேசினார்கள். அவரை படிக்க ஆசை வந்தது எனக்கும்.அந்த சுதந்திர பயண மனிதனின் வரலாறை புரட்டினேன்.சிறு வயதிலேயே ஆஸ்துமாவால்பாதிக்கபட்டவன்.வாழ்வதே கொஞ்சம் கடினம் தான்.ஆனால் அவன் அர்ஜண்டினாவில் ஒரு மருத்துவகல்வி கற்கிறான்.எப்போதும் புத்தக வாசிப்பே அவன் பொழுது போக்கு.தீரா கம்யூனிச கொள்கை பிடிப்பாளன்.அவன் கல்லூரி காலத்தில் சாதாரண இளைஞர்கள் ஆசை போலவே ஊர் சுத்த ஆசைபட்டு இன்னொரு நண்பனோடு நாடு நாடாய்
பயணம் செய்தான். அவன் அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் சில சிறிய சிறிய நாடுகளில்உள்ள தொழுநோயாளிகளை சந்தித்து அவர்களை
மருத்துவத்தை விட மன வலிமை செய்வதே ஒரு குறிக்கோளாக இருந்தான்.சே வெறும் காடு மழைகளை மட்டுமல்ல அடித்தட்டு மக்களின் வறுமையையும் அவர்களின் துன்பத்தையும் அளவுக்கு அதிகமாக படித்தான்.இவர்களை மீட்டெடுப்தே அவன் குறியாய் இருந்தது. மீண்டும் சொந்த ஊர் திரும்பி கல்வி படிப்பை முழுவதுமாய் முடித்து திரும்பி கியுபாவுக்கு சென்று பிடல்காஸ்ட்ரோவுடன் இணைந்து அடித்தட்டு மக்களின் கவலைகளை மீண்டெடுப்பதேன கொரிலா போர் செய்து வென்றான்.நிறைய பதவிகள் கிடைத்தும் மீதம் உள்ள நாடை காப்பாற்ற பொவிலியா சென்ற அவர் அங்கு போராடி

ுட்டுகொல்லபட்டார்.இது எல்லாருக்கும் தெரிந்த வரலாறே இதில் சே விடம் நான் தெரிந்து கொண்ட முக்கிய நோக்கமான குறிக்கோள்”உழைக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் குடும்ப முன்னேற்றம் பணம்
என்பதை மறந்து சமுக முன்னேற்றம் என்ற நோக்கோடு செயல்பட்டால் முன்னேற முடியம் என்பதே ஆகும்.சே சந்தித்த ஒரு தொழு நோயாளி சொன்னது அது”சே என் நண்பர். அவர் எங்களை
தொடும் போதும் விளையாடும் போதும் எந்த வித பாதுகாப்பு உறை அணியாமல் எங்ளோடு பழகினார்.அவரின் அன்பு பாரபட்சமற்றது.
இந்த மூச்சு திணறும் ஆஸ்துமா நோயோடும்
இவரின் போராட்ட குணம் மத்த போராட்ட தலைவரோடு இவரை வித்தியாசபடுத்துகிறது.

மீண்டும் பாஜாக வாங்கிய பல்பு…

மீண்டும் மோடி அலை ஆனால் தமிழகத்தில் அல்ல ..பாஜாகா விற்கு வட இந்தியாவில் பெரும்பான்மை இருந்தாலும் நல்ல ஓட்டு வித்தியாசத்தில் அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றி பெற்றிருந்தாலும் திராவிட தேசத்தில்
கால் ஊண்ட முடியாத நிலை உள்ளது. மேலும் தமிழ் மக்கள் மோடியின் மீது எப்போதும் வெறுப்பான மனநிலையோடே உள்ளனர். நமது இளைய சமுதாய இளைஞர்கள் சமுக வளைதளத்தில் மோடி ஆட்சியின் சூழ்ச்சிகளை பிரித்து மெம்ஸ்கலாக காய போட்டுவிட்டனர். அது மட்டுமில்லாது தமிழகம் திராவிட பூமி என்பதையும் நியாபத்தில் வைத்து கொள்ள வேண்டும்.அண்ணா, எம் ஜி ஆர்,கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களின் முகத்தை பார்த்து பழகிய தமிழ் சமுகம் வேறு பக்கம் திரும்ப வாய்ப்பில்லை.அம்மா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட சில குழப்பங்களையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழகத்தை போல கேரளாவிலும் இதே நிலை தான்.சொல்ல போனால் புதிதாய் தோன்றிய கமல் கட்சி கூட அதிக வாக்குகளை பிரித்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி வருங்கால மாநில தேர்தலில் நல்ல பெரும்பான்மை பெரும் கட்சியாய் இருக்கும் என்பதில் ஐய்யப்பாடில்லை. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.இப்படி ஒரு தோல்வியை சந்தித்த பின் மீண்டும் அவர் தமிழ் நாட்டுக்கு
நஞ்சு பூச சில கார்ப்ரேட் திட்டத்தை தமிழகத்தில்
இறக்குவார். அதற்கு நமது மக்கள் மீண்டும் போராட வேண்டியது வரும் என்பதை நினைத்தால் தான் கவலைகிடமாக உள்ளது.

தமிழகத்திலெங்கே மோடி அலை????

ீண்டும் மோடி அலை ஆனால் தமிழகத்தில் அல்ல ..பாஜாகா விற்கு வட இந்தியாவில் பெரும்பான்மை இருந்தாலும் நல்ல ஓட்டு வித்தியாசத்தில் அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றி பெற்றிருந்தாலும் திராவிட தேசத்தில்
கால் ஊண்ட முடியாத நிலை உள்ளது. மேலும் தமிழ் மக்கள் மோடியின் மீது எப்போதும் வெறுப்பான மனநிலையோடே உள்ளனர். நமது இளைய சமுதாய இளைஞர்கள் சமுக வளைதளத்தில் மோடி ஆட்சியின் சூழ்ச்சிகளை பிரித்து மெம்ஸ்கலாக காய போட்டுவிட்டனர். அது மட்டுமில்லாது தமிழகம் திராவிட பூமி என்பதையும் நியாபத்தில் வைத்து கொள்ள வேண்டும்.அண்ணா, எம் ஜி ஆர்,கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களின் முகத்தை பார்த்து பழகிய தமிழ் சமுகம் வேறு பக்கம் திரும்ப வாய்ப்பில்லை.அம்மா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட சில குழப்பங்களையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழகத்தை போல கேரளாவிலும் இதே நிலை தான்.சொல்ல போனால் புதிதாய் தோன்றிய கமல் கட்சி கூட அதிக வாக்குகளை பிரித்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி வருங்கால மாநில தேர்தலில் நல்ல பெரும்பான்மை பெரும் கட்சியாய் இருக்கும் என்பதில் ஐய்யப்பாடில்லை. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.இப்படி ஒரு தோல்வியை சந்தித்த பின் மீண்டும் அவர் தமிழ் நாட்டுக்கு
நஞ்சு பூச சில கார்ப்ரேட் திட்டத்தை தமிழகத்தில்
இறக்குவார். அதற்கு நமது மக்கள் மீண்டும் போராட வேண்டியது வரும் என்பதை நினைத்தால் தான் கவலைகிடமாக உள்ளது.

பு(ப)கை உயிரை கொல்லும்

இங்கே நிறைய பேர் ஒவ்வொரு முறை அந்த
சிக்ரெட்டை புகைக்கும் போதும். நடு நெஞ்சு வலிக்கிறது.வேண்டாம் என சொல்கிறது.
இந்த புகை ஒரு பெரும் போதை இதை விட முடியாது. ஒரு முறை பழகி விட்டால் அவ்வளவு தான் என்றெல்லாம் சொல்வார்கள். ஆம் அது தொண்ணூறு சதவிகித உண்மை தான். ஆனால் அந்த மீத முள்ள பத்து சதவிகிதம் தான் உங்களின் உயிரை கையில் பிடித்து காப்பாற்ற உதவ போகிறது. நான் தினமும் சிக்ரெட்டுக்கான எண்ணம் தோன்றும் போதெல்லாம் பட்டேன போயி பற்ற வைத்து அடித்தும் விடுவேன். பிறகு
புலம்பியும் தொலைப்பேன். சுவரை என் கையால்
குத்திகொள்வதுமுண்டு. எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருக்கும்.இனி மேல் குடிக்க கூடாது என்பதற்காக நிறைய வீடியோ பார்ப்பேன்.
கொஞ்ச நேரம் இனிமேல் அடிக்கவே கூடாதென திட்டமெல்லாம் போடுவேன். ஆனால் மீண்டும் இரவே போய் இன்னொன்றை பற்ற வைத்து விடுவேன். இது எனக்கு எரிச்சல் ஊட்டியது. நான் தொடர் புகைபோக்கியல்ல ஏதோ இரண்டு மூன்று அடிப்பேன். பொழுது போக்கிற்கு பிறகு அதற்கே
தொண்டை வலிக்கும்.இதை எப்படியேனும் நிறுத்த நினைத்தேன்.அடுத்து வரும் ரெண்டு நாளை எடுத்து கொண்டேன்.லீவெல்லாம் போட்டு விடாமல் புகை பிடித்தேன். ஒரே நாளில் ரெண்டு பாக்கெட். எனக்கு சலிக்கும் வரை குடித்தேன்.
அப்பறம் மூனாவது நாள் என் மனதிடம் பேச பழகினேன். ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டேன். எப்போதெல்லாம் எனக்கு புகைபிடிக்க எண்ணம் வருமோ அப்போதெல்லாம் அது எண்ணமாக தான் வரும். அதை மூளைக்கு போகும் முன்னே ஓ இது வருகிறது இதை மறந்து விடு என அந்த எண்ணத்தை எனக்குள் நானே போ என்பேன். சட்டென அது மறந்து விடும்.
வேறு எதையாவது யோசிக்க ஆரம்பிப்பேன்.
புகைக்கும் எண்ணமே குறைந்து போனது. இதையெல்லாம் தாண்டி எப்போதாவது சோகமாக இருக்கும் போது தோணும். அப்போது அஞ்சு ரூபாய் சிகிரெட்டை வாங்கி பற்ற வைக்காமல் வாயில் வைத்து இழுத்து விட்டு உடைத்து போட்டுவிட்டு நடந்து விடுவேன்.முயற்சி செய்யுங்கள். என்னால் முடிந்தது உங்களாலும்
முடியும்.

Design a site like this with WordPress.com
Get started