நானும் இஞ்சினியர் தான்-அக்னிமித்ரன் -2

இருள் கல்லூரியின் விடுதியை விசாரித்துகொண்டிருக்கிறது.கட்டமாக வரிசையாக அறைகளின் அணிவகுப்பை கொண்ட விடுதியின் நடுவே வாலிபால் விளையாடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
மாலையில் வீடு வந்து சேர்ந்த காகாங்களின் கூச்சத்தை போல ஒரே சலசலப்பு.வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளை தரக்கூடிய நாட்கள் அவை.அறை எண் 307ல் மித்ரன் தனெக்கே அடையாளமான கட்டம்போட்ட லுங்கியை கண்டிக்கொண்டு ஒட்டை விழுந்த வெள்ளைபனியனை ஒடுங்கிய மார்பால் மறைத்து அவனில் இரும்பு கட்டிலில் பாயை விரித்து உக்காந்திருக்கிறான்.

“ஹாய் மாம்..ஐ காட்ட ஜாப் இன் அசஞ்சர் மேம்”…
என பொன்னிற புன்னகையோடு கண்ணாடியை
பெருவிரலால் சரிசெய்துகொண்டே அஷ்வின் பேசுகிறான்.
“ம்ம்ம்….மெக்கானிக் படிப்பாறாம்…அப்பறம் சாப்ட்வேர் கம்பேனிக்கு வேலைக்கு போவாறாம்.
அப்பறம் என்னா மயித்துக்கு டா இவன்லா படிக்க வரான்…என அவன் காதுக்கு விளாதபடி துருவன்
மித்ரனிடம் அசக்கி மொழியில் உரைக்கிறான்.
துருவன் இந்த மூவரில் கொஞ்ச வித்தியாசமானவன் தான்.அவன் அப்பா ஒரு போட்டாகிராபர்.திரண்ட உடல் வாகுடன் வெள்ளையாக பார்பப்தற்கு ஹிந்தி நடிகரை போலவே இருப்பான்.இதில் கூத்து என்னவென்றால் அவனுக்கு பெண் தோழிகளே யாருமில்லை என்பது தான்.எப்போதும் எதாவது புத்தகத்தை புரட்டி கொண்டிருப்பது தான் அவனுக்கு பொழுதுபோக்கு. அவனுக்கு மார்க்கிச கோட்பாடுகள் மீது அளவு கடந்த ஈடுபாடு.லெனின்,மாவோ,பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா,ஸ்டாலின்,மார்க்ஸ் என இப்படி யாரையாவது பற்றி பேசிச்கொண்டே இருப்பான்.அதுவும் அவன் சொல்வதை புரிந்து கொள்பவர்களிடம் மட்டும் தான் அவன் பேச்சு எப்போதும் இருக்கும். கையில் இப்ப யேதோ
தாய் என்ற புத்தகத்தை படித்துகொண்டிருந்தான்.நல்ல வசதிய குடும்பத்தை சேர்ந்தோன் தான். அப்படி அவன் உடைகள் இருந்தாலும் ஒரு நாளும் அவன் பேச்சிலோ செயலிலோ இருக்காது. மற்றவர்களிடமிருந்து எப்படியும் தனித்திருப்பதே அவனின் சிறப்பு.
“எந்த வேலையா இருந்தா என்னடா..நல்ல சம்பளம் கெடச்சா போதாதா….”
“மித்ரா…அப்படி பணத்துக்காக நம்மல நம்மலே மாத்திகிட்டு இருந்தா நம்ம நம்மலா வாழுற
வாழ்க்கை இழந்துருவண்டா..கிட்டதட்ட இவனுக்கும் அப்படி நிலைமை வரும்.
“போடா !!!!காசுக்காக என்னவேணும்னா பண்ணலாம்டா…என்றான் மித்ரன்.
“ம்ம்ம்..உனக்கு போக போக புரியும் என சொல்லி விட்டு மீண்டும் புத்தகத்தை எடுத்து வைத்து உக்காந்தான்.
அஷ்வின் அம்மாவிடம் பேசிவிட்டு ஸ்பிக்கரில் பிட்புள் பாட்டு போட்டு தலையாட்டிக்கொண்டே
கூடவே பாடினான்.அந்த சத்தம் புத்தகம் படித்து கொண்டிருந்த துருவனுக்கு எரிச்சலாக இருந்தது.
புத்தகத்தை படார் என மூடி வைத்துவிட்டு படுத்துகொண்டான்.
மித்ரனுக்கு போன் வந்தது. போனின் மேல் கண்ணாடி உடைந்திருந்ததால் அவனால் போனை அட்டன் செய்ய முடியவில்லை.விரலை வைத்து இழுத்து இழுத்து பார்க்கிறான் ஒன்றும் ஆனா பாடில்லை. படார் என ஒரு தட்டு தட்டியது அட்டனாகிவிட்டது.
“ம்மா… சொல்லுமா…
“சாப்டியா???
“ம்ம்..நீமா??
“சாப்டேன்.இன்னைக்கு வேலைக்கு ஆளெடுக்க வராங்கனு சொன்னயே என்ன ஆச்சு???
“வந்தாங்கமா…கடைசி ரவுண்டு வரைக்கும்
போயிட்டேமா…கடைசில தாமா பெயிலாகிட்டேன்.
“”சரி,சரி விடு,இன்னும் ஒரு மாசந்தே இருக்கு..
எப்டியாச்சும் வாங்கிரு..கடன புடன வாங்கி உன்னைய படிக்க போட்ருக்கு.எப்படியாச்சும் வேலை வாங்கிரு…
“சரி மா…வைமா..என போனை தூக்கி உடையாதது போல தலையணை மீது எறிந்தான்.
தொட்டை குழியில் அவனின் படிப்புக்கு அடுத்த
படியான நாட்களை நினைத்து தீ எரிகிறது.
“அடுத்த நாள் காலையில் வகுப்பறையில்
மெக்கானிக்கல் பிரிவை சேர்ந்த எழுபது பேரும்
அரங்கத்தில் அமந்திருக்கிறார்கள்.
” யாரோ!!!!சீப் கெஸ்ட் கிலாஸ் எடுக்குறாங்களாமா….ஓ வென கேட்டுகொண்டான் மித்ரன்.
கருப்பு கலர் கோட்டுபோட்டு வெளீர் என ஒரு கண்ணாடி போட்ட பிண்டம் ஒன்று வந்து பேசிக்கொண்டிருந்தது.அப்படி என்னதான் பேசுவாரோ…ஒன்னும் புரியவில்லை என மித்ரன்
புலம்புவது முகத்தில் தெரிந்தது.இப்படி எவனாவது கண்ணாடி அறையில் நாளு வார்த்தை இங்கிலிஷில் பேசிகொண்டால் அவன் பெரியால் என நினைத்து கொண்டான்.
துருவன் அவன் வாயிலிருந்து வார்த்தைகள் சிதறக்கூடாது என்பதற்காக மித்ரன் காதுக்கு போகும்படி கையால் பாதை அமைத்து
“டேய்…டிசைன் பத்தி இவனுக்கு ஒன்னும் தெரியலடா..சும்மா அவங்க கம்பேனிய பத்தி பீட்டர் விட்டிட்டு இருக்காண்டா”என்றான்.
ஆம் நம் இந்தியர்கள் இன்னும் துரைமார்களின் ஆட்சியிலிருந்து விடுபடவில்லை.தஸ்…புஸ் என பேசுபவனைத்தான் இந்த சமுகம் மதிக்கிறது.நிறைய திறமைசாலிகள் கூட ஆங்கில மோக கிறுக்கர்களுக்கு பயந்து
கூடுக்குள் ஒளியும் ஆமையாகத்தான் இருக்கிறார்கள் என அவனுக்கு தோன்றியது.

Published by sibi saravanan

இதயம் சொல்வதை இறுக பிடித்து எழுதி தொலைக்கிறேன் ......

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started